நோர்வே ஒஸ்லோவில் இலங்கை தூதரகத்தை தாக்கிய 8பேர் கைது

கடந்தவருடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றபோது அதனை நிறுத்தவேண்டும் என்று நோர்வே ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது 2009ம் அண்டு ஏப்ரல் 12ம் திகதி இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்கள்...

கொழும்பு முஸ்லிம்கள் சார்பாக ஐ.தே.கட்சியில் எவரும் தெரிவாகவில்லை -முன்னாள் அமைச்சர் அஸ்வர்

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முதலாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு நகர் வாழ் முஸ்;லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்படவில்லை ஐ.தே.கட்சிக்கு வாக்களித்தால் இக்கதிதான் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு நேரும்  என்று...

ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கு உரியமுறையில் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் -ஜனாதிபதி தெரிவிப்பு

ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கு உரிய முறையில் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார் மக்கள் நாட்டுக்காக தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாகவும் பதிலுக்கு தாங்களும் எமது கடமைகளை...

அச்சுவேலியில் மாணவி ஒருவர் குத்திக்கொலை

நேற்றுமுன்தினமிரவு வீட்டில் தனியாக இருந்த 15வயதான மாணவி ஒருவரை இனந்தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கடந்த  ஒருமாதகாலத்தில் அதிகரித்துள்ள இதுமாதிரியான தனியாக இருந்தபெண்கள் கொலைசெய்யப்படும் சம்பவத்தில் இது நாலாவது சம்பவம் என்பதும்...

பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று கூடலாம்..

கடந்த பெப்ரவரி 8ம் திகதியிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று இடம்பெறவுள்ளது மார்ச் மாதம் 16ம் திகதி 17ம் திகதிகளில் நடத்த...

அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தை செய்ய மாட்டேன் -ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்லவெனத் தெரிவித்திருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச்...

ஜனாதிபதியுடன் எதிர்கட்சித் தலைவர் இன்று சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிற்கும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே சந்திப்பொன்று இன்று முற்பகல் 9.30மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கிறது அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரின்...

வவுனியாவில் ஒருவர் வெட்டிக் கொலை

வவுனியா ஆண்யா புளியங்குளத்தில் நேற்று இரவு முஸ்லிம் நபர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு;ள்ளார் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் மொஹமட் முஸ்தபா சாரூக் என அடையாளம் காணப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி குடும்பதகராறே இந்த...

யாழ்ப்பாணத்தில் மூன்றுநாள் சர்வதேச கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக வெளிநாட்டு கைத்தொழிலாளர்கள் பங்குகொள்ளும் மூன்றுநாள் சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது இருநூறுக்கும் அதிகமான கைத்தொழிலாளர்கள் இ;க்கண்காட்சியில் தமது காட்சியறைகளை திறந்துள்ளனர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியையும் அதனோடு கூடிய விளையாட்டரங்கையும்  மையப்படுத்தி...

மீள் தேர்தலின் பொருட்டு விரிவான பாதுகாப்பு

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுபிட்டி வாக்களிப்புப் பிரிவுகளுக்கான மீள் தேர்தலின் பொருட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கென பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 2000உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட...

ஐஸ்லாந்து எரிமலை குமுறலால் விமான சேவைகள் பாதிப்பு, ஓமந்தைவரை புகையிரதசேவை நீடிப்பு..

கொழும்பு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்ல மற்றும் விமான நிலையத்திற்கு வரவிருந்த மூன்று சர்வதேச விமானசேவைகள் நேற்றுக்காலை இரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறலால் பரவிவரும் சாம்பல் புகை காரணமாகவே, இந்த...

கும்புறுப்பிட்டி வாக்கு எண்ணும் பணி திருமலை மாவட்ட செயலகத்துக்கு மாற்றம்.. புலிகளின் அச்சுறுத்தலாம்

திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுப்பிட்டியவில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மீள்வாக்குப் பதிவின் பின்னரான வாக்கு எண்ணும் பணிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. பொலிஸாரின் ஆலோசனைக்கு அமையவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (more…)

உரிமம் பெற்ற வங்கிகளை வடக்கு கிழக்கில் திறக்க மத்தியவங்கி அனுமதி

உரிமம் பெற்ற வங்கிகள் பல வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார செயற்பாடுகளிற்கு துணைபுரிவதற்கு மிகுந்த ஈடுபாட்டினை காட்டிவருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி கொமர்ஷல் பாங்க் ஒப் சிலோன் பிஎல்சி, தேசிய...

குருவிட்ட மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதம்

இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் நேற்றிரவு மினி சூறாவளியொன்று ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சுமார் 20நிமிடங்கள் வீசிய இந்த மினி சூறாவளி காரணமாக குருவிட்ட பகுதியிலுள்ள பத்து வீடுகள்...

பொன்சேகாவுக்கு அடுத்த நீதிமன்ற விசாரணையின் போது தண்டனை வழங்கப்படக் கூடும்..

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு அடுத்த நீதிமன்ற விசாரணையின்போது தண்டனை வழங்கப்படக் கூடுமென தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ_லுகொல்ல தெரிவித்துள்ளார். ஜெனரல் பொன்சேகாவுக்கெதிரான நீதிமன்ற விசாரணைகள் நாளை நடைபெறவுள்ளன. மேலும் பொன்சேகாவுக்கு...

கும்புறுபிட்டி மீள்தேர்தல் வாக்கெண்ணுதல் திருமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றம்

திருமலையின் கும்புறுப்பிட்டிய மீள்தேர்தலில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கையும், தேர்தல் முடிவுகள் வெளியீடும் கும்புறுப்பிட்டிய வாக்களிப்பு நிலையத்திலிருந்து திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது பாதுகாப்பு குறித்த பொலிஸாரின் அறிவுரைக்கமைய இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் திணைக்களம்...