பட்டப்பகலில் வேனை வழிமறித்து 58 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்மக் கும்பல்…!!
மஹாராஸ்டிராவில் பட்டப்பகலில் ரூ. 58 லட்சம் பணத்துடன் சென்ற வேனை கொள்ளையர்கள் சிலர் வழிமறித்து கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஸ்டிராவின் தானே நகரில், ரயில் நிலையங்களில் வசூல் செய்யப்பட்ட டிக்கெட் கட்டண பணம் ரூ. 58 லட்சத்தை வேன் ஒன்றில் எடுத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், பட்டப்பகலில் அந்த வேனை கொள்ளையடித்த மர்ம நபர்கள் சிலர் அதில் இருந்த மொத்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கல்யாண்-ஷில் சாலையில் நிஜி ரயில் நிலையம் அருகே தானி இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
துணை பொலிஸ் ஆணையர் இது பற்றி கூறுகையில், பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் ஓட்டுனர் ஒருவரும், துப்பாகி ஏந்திய காவலர் ஒருவரும், மற்றொரு நபரும் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், வேனை வழிமறித்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும், தற்போது திவா ரயில் நிலையம் அருகே அந்த வேன் கைப்பற்ற பட்டுள்ளதாகவும், கொளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளை வழக்கில் தற்போது தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating