கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது…!!
Read Time:35 Second
பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசியப்பனுக்கு தகவல் கிடைத்தது.
அவர் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த பூலோக லட்சுமி, குமார் ஆகிய 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Average Rating