அயனாவரத்தில் காதல் திருமணம் செய்த நர்சு தற்கொலை…!!

Read Time:1 Minute, 39 Second

f6a5e2a0-c51a-4a53-8155-533d7b99c391_S_secvpfசென்னை அயனாவரம் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (26). மயிலாப்பூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (23). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 7 மாதமாகியும் சீதாலட்சுமிக்கு குழந்தை உண்டாகவில்லை. தனது தோழிகள் உடனே கருத்தரித்துள்ளதாக கணவரிடம் சீதாலட்சுமி கூறி வருத்தப்பட்டு வந்தார்.

மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சீதாலட்சுமி வீட்டு சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சீதாலட்சுமியின் உறவினர் அய்யப்பன் அயனாவரம் போலீசில் புகார் செய்தார். அதில், ‘‘வரதட்சணை கொடுமையால் சீதாலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்’’ என்று புகாரில் கூறி இருந்தார்.

இது தொடர்பாக உதவி கமிஷனர் சங்கரன், இன்ஸ்பெக்டர் யுவராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருவில் அழிந்துபோன இரட்டை சகோதரனுக்கு குழந்தை பிறந்த வினோதம்…!!
Next post சென்னை பஸ்சில் குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்டதால் கண்டக்டர் மண்டை உடைப்பு: பயணி தப்பி ஓட்டம்…!!