5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்: கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்…!!

Read Time:2 Minute, 5 Second

thiruvannamalai_driver_0015 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 30ம் திகதி இரவு அருகே உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அன்றிரவு சிறுமியின் பெரியப்பா வீட்டிற்கு அவரது நண்பரான கோட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஐயப்பன் (46) என்பவர் குடிபோதையில் வந்துள்ளார்.
அப்போது சிறுமியின் பெரியப்பா வெளியே சென்றதால், வீ்ட்டில் தனியாக இருந்த சிறுமியை ஐயப்பன் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

பின்னர், வீடு திரும்பிய பெரியப்பாவிடம் சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஐயப்பனை தீவிரமாக தேடி வந்துள்ளார்.
ஐயப்பன் இருக்குமிடம் பற்றி, நேற்று காலை சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்ற அவர்கள் ஐயப்பனை மடக்கி பிடித்து தங்கள் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்த பொலிசார் ஐயப்பனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த பெண்ணுக்கு பிணை..!!
Next post பேருந்து மற்றும் ரெயில்களில் தூங்கவும் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை: இது இங்கல்ல, அமெரிக்க நகரத்தில்…!!