தன்னை நாயாக நினைக்கும் கலிபோர்னியா கன்றுக்குட்டி: டுவிட்டர் பயனாளர்களின் பேரன்பை பெற்றது…!!

Read Time:1 Minute, 28 Second

04b3a9be-a043-4d7b-ba82-0c3086482a14_S_secvpfஅமெரிக்காவின் கலிபோர்னியாவில், எட்டு வாரக் கன்றாக கொல்லப்பட இருந்த கோலியாத்தை ஷாலே ஹப்ஸ்(17) என்கிற பள்ளி மாணவி காப்பாற்றினார். பலவீனமான நிலையில் இருந்த கோலியாத், ஷாலேவின் பாதுகாப்பில் அவளது வீட்டிலேயே வளர்ந்து வருகின்றது. ஷாலே, ஏற்கனவே தனது வீட்டில் மூன்று நாய்களையும் வளர்த்து வருகின்றார்.

அந்த நாய்களுடன் சகஜமாக பழகிவரும் கோலியாத், அவர்களது உணவை உட்கொள்வது, அவர்களது கிண்ணத்திலிருந்தே தண்ணீர் அருந்துவது என தன்னையும் ஒரு நாய் இனமாகவே எண்ணுகின்றது.

சமீபத்தில் ஒருநாள், ஷாலேயின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில், மற்ற நாய்களைப் போல கோலியாத்தும், வீட்டின் சோபாவில் அமர்ந்துகொண்டது.

ஷாலே, கோலியாத் சோபாவில் அமர்ந்திருந்ததைப் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். பிறகென்ன, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோரின் செல்லமாக கோலியாத் மாறிவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலுவலகங்களில் வைக்கும் பால் பாட்டிலுக்கும் பூட்டு: திருட்டை தடுக்க புதிய வழி…!!
Next post தெற்கு சூடான் விமான விபத்தில் உயிர் பிழைத்த 13 மாத குழந்தை…!!