சவுதியில் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் சென்னை வந்தார்: அரசு மருத்துவமனையில் அனுமதி…!!
Read Time:1 Minute, 18 Second
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் சவுதிக்கு சென்று ஒரு வீட்டில் வேலை செய்தபோது, அந்தவீட்டின் உரிமையாளர் கஸ்தூரியை கொடூரமாக தாக்கி அவரது கையை துண்டித்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும், கஸ்தூரியின் குடும்பத்தார் அவரை வேலூருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
இதையடுத்து கஸ்தூரி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். அரசு அதிகாரிகள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், கஸ்தூரிக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது மகன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
Average Rating