அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்ற கோரிக்கை…!!
Read Time:1 Minute, 13 Second
அரச நிறுவனங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரருக்கு மரியாதை விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜாதி மதம் கடந்து அனைவரும் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நடத்துவது சம்பந்தமாக இன்று காலை இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12ம் திகதி பூரண அரச மரியாதையுடன் பாராளுமன்ற மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.
Average Rating