இலங்கை கடற்பகுதியில் நாளை விழும் மர்ம பொருளை ஆராய்வதற்கான குழு சென்றது..!!
Read Time:1 Minute, 15 Second
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 100 கி.மீ தொலைவில் நாளை விண்ணில் இருந்து விழவுள்ளதாக கூறப்படும் மர்மப்பொருள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்று அங்கு சென்றுள்ளது.
WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள் தொடர்பில் தங்காளை பிரதேசத்தில் இருந்து ஆய்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முற்பகல்11.45 மணியளவில் இந்த மர்மப் பொருள் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் விழவுள்ளது.
இது 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்ட அப்பலோ விண்கலத்தின் பாகம் அல்லது அதற்குப் பின்னர் விண்ணில் செலுத்தப்பட்ட லூனா விண்கலத்தின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதேவேளை நாளை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Average Rating