சிரியா விவகாரத்தில் பிரான்சின் தலையீட்டுக்கு பழிவாங்கவே பாரிசில் ஐ.எஸ். தாக்குதல்: புதிய தகவல்..!!
Read Time:1 Minute, 21 Second
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பட்டக்லான் இசை அரங்கத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்கா தலைமையிலான விமானப்படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூச்சலிட்டதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்த வானொலி செய்தியாளர் கூறியுள்ளார்.
சிரியா விவகாரத்தில் தலையிட்டது உங்கள் ஹாலண்டேவின் (பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே) தவறு. அவர் சிரியா மற்றும் ஈராக் விவகாரத்தில் தலையிட்டுருக்கவே கூடாது என தீவிரவாதிகளில் ஒருவன் கத்தியதாக அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating