தேனி அருகே 16 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்..!!
Read Time:1 Minute, 4 Second
தேனி அருகே உள்ள வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 31). இவருக்கும் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் பெண் வீட்டில் நடைபெறுவதாக இருந்தது.
இதையொட்டி ஏராளமான உறவினர்கள் குவிந்தனர். இந்த தகவல் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் எட்டியது. அவர்கள் திருமண வீட்டுக்கு விரைந்தனர். அப்போது சிறுமிக்கு 16 வயதுதான் ஆகிறது. திருமணம் நடத்தினால் சட்டப்படி குற்றம் என்று எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து பெற்றோர் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர் திருமணம் செய்து வைப்போம் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது.
Average Rating