உணவுப் பொருட்களின் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை..!!
Read Time:1 Minute, 13 Second
இலங்கைக்கு வருடாந்தம் சுமார் ஒரு பில்லியன் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
உணவுற்பத்தி தேசிய செயற்திட்டத்தின் மூலம் இந்த செலவினை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த முடியும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையில் நேற்று இடம்பெற்ற, உணவுற்பத்தி தேசிய செயற்திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
உணவுற்பத்தி தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலமும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதினுடாகவும் நாட்டை அபிவிருத்திப் பாதையினை நோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating