நெல்லையில் வாட்ஸ்அப்பில் ஆபாச படம் பரவியதால் பெண் தீக்குளித்து சாவு: பக்கத்து வீட்டு தம்பதி கைது…!!

Read Time:3 Minute, 39 Second

24fb73fe-77a0-4447-b373-580e528a7277_S_secvpfநெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). இவரது மனைவி உஷா (33). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளான். இவர்கள் கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வந்தனர்.

லட்சுமணன் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகவும், உஷா தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராகவும் வேலைபார்த்து வந்தனர். தீபாவளி விடுமுறைக்காக இவர்கள் அனைவரும் சொந்த ஊரான புளியங்குடிக்கு வந்தனர். அப்போது கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த உஷா கடந்த 16–ந்தேதி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.

இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது உஷா மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் மரண வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கடந்த சில மாதங்களாக எனது கணவர் வீரியத்திற்கான மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்து எனக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். நான் முடியாமல் இருந்தால் என் நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்தார். தீபாவளி பண்டிகையையொட்டி நான் புதிதாக எடுத்திருந்த சேலையை பக்கத்து வீட்டு தோழியிடம் சென்று உடுத்தி காண்பித்தேன்.

அப்போது தோழியின் கணவர் என்னை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து அவரது நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் பரவ விட்டார். இதை எனது கணவர் தட்டிக்கேட்காமல் என்மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் அடிக்கடி ‘செக்ஸ்’ மாத்திரைகள் சாப்பிட்டு என்னை சித்ரவதை செய்ததால் மனம் உடைந்து தீக்குளித்தேன்.

இவ்வாறு தனது மரண வாக்குமூலத்தில் உஷா கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உஷா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாக்குமூலத்தில் கணவர் லட்சுமணன் மீது புகார் கூறியிருந்ததால் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே உஷாவை ஆபாசமாக படம் எடுத்த கோவை அடுத்த சின்னவேடம்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த புவனேஷ்வரன் (38), அவரது மனைவி யசோதா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லட்சுமணன் மற்றும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி அருகே கோபித்து கொண்டு தாய் வீடு சென்ற மனைவிக்கு மறுமணம்: கணவர் அதிர்ச்சி…!!
Next post திருந்தி வாழ்வதாக கூறி விட்டு வாலிபரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது…!!