திருகோணமலை கடற்கரையில் சடலம்..!!
Read Time:1 Minute, 9 Second
திருகோணமலை கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை சுமார் 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.
அதைகண்ட பொதுமக்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டு திருகோணமலை தள வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சடலம் 48 வயதுடைய ஒருவராக இருக்கலாம் எனவும் மது அருந்திய பின்பு கடலுக்கு குளிக்கச் சென்ற போது நீரிழ் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சடலத்தினை பொறுப்பேற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றதது.
Average Rating