தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 7 Second
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தேற்றாத்தீவு மகா வித்தியாலய வீதியில் உள்ள வீட்டின் முன்பாக இருந்த மா மரத்திலேயே குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் தேற்றாத்தீவில் திருமணம் செய்துள்ள பழுகாமத்தினை சேர்ந்த கே.குபேந்திரன் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஸ்தலத்துக்கு சென்றுள்ள களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating