மனைவி சுட்டுக்கொலை; சந்தேகத்தில் புத்தளம் இராணுவ கட்டளைத்தளபதி கைது
Read Time:49 Second
புத்தளம் மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சந்தன ரூபசிங்கவின் மனைவி வியாழக்கிழமை நள்ளிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். களனி சப்புகஸ்கந்தவிலுள்ள இவர்களது வீட்டிலேயே நள்ளிரவு 12 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. படுக்கையறையில் கணவனும் மனைவியும் இருந்தபோது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தனது மனைவியை பிரிகேடியர் சந்தன ரூபசிங்கவே சுட்டுக்கொன்றிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் சப்புகஸ்கந்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.