குடும்பத்தாருடன் முச்சக்கர வண்டியில் இறுதிப் பயணம் சென்ற இரண்டு வயது சிறுமி..!!
Read Time:1 Minute, 28 Second
கல்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்றை திருப்புவதற்கு முற்பட்ட வேளை அந்த முச்சக்கர வண்டி சரிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் முச்சக்கர வண்டியின் உள்ளே இருந்த 2 வருடமும் 7 மாதங்களே ஆன சிறுமி வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த சிறுமி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது குறித்த சிறுமியின் தாய் மற்றும் 7 வயதுடைய சகேதரர் ஒருவரும் முச்சக்கர வண்டியினுள் இருந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியை செலுத்தியவர் உயிரிழந்த சிறுமியின் தந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கல்னேவ, பன்சலை வீதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்.
Average Rating