பதவிப் பிரமாண ஓராண்டு பூர்த்தி நிகழ்வை எளிமையாக நடத்த ஏற்பாடு..!!
Read Time:1 Minute, 14 Second
ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில், அதுகுறித்த நிகழ்வை எளிமையான முறையில் நடத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி 8 புரட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாண பூர்த்தி நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எவ்வித கொண்டாட்டங்களும் இன்றி, பண விரயமின்றி நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
பதவிப் பிரமாண ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி முற்பகல் களுத்துறை போதி பகுதியில் மதவழிபாட்டு நிகழ்வுகளும், பிற்பகலில் ஜனாதிபதியின் விபரங்கள் அடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றும் நடைபெறவுள்ளது.
Average Rating