சிவகங்கை சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த 2 டாக்டர்களிடம் விசாரணை…!!
சிவகங்கையில் 17 வயது சிறுமி, தனது தந்தை உள்பட பலரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஜூன் 16–ந்தேதி சிவகங்கை மாஜிஸ்திரேட்டிடம் சிறுமி வாக்குமூலம் கொடுத்தார்.
அதன்பேரில் சிவகங்கை டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர், கண்டக்டர் நமச்சிவாயம், தி.மு.க. நிர்வாகி முத்துராக்கு உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். சிறுமியை மிரட்டி சிலர் மீது பொய் புகார் கூற வைத்ததாக அவரது அத்தை தாமரைச்செல்வியும் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவரையும் சேர்த்து இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக சிவகங்கை மற்றும் மதுரையை சேர்ந்த 2 டாக்டர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு மதுரை டாக்டரிடம் விசாரணை நடந்தது. நேற்று சிவகங்கை டாக்டரிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினோம். மேலும் சிறுமியிடம் 2–வது முறையாக வாக்குமூலம் பெறப்படும்” என்றனர்.
Average Rating