ரயில் நிலையத்துக்காக பள்ளம் தோண்டும்போது சாமி சிலைகள் கண்டெடுப்பு
ரயில் நிலையம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை மற்றும் கருட ஆழ்வார் சிலைகள் கிடைத்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது சேர்ந்தனூர் கிராமம். இங்கு புதிதாக ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நடைமேடை அமைப்பதற்காக சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் 2 சாமி கல் சிலைகள் இருந்தது தெரியவந்தது. பூமியில் சாமி சிலைகள் கிடைத்த தகவல் கிராம மக்களுக்கு தெரிந்ததும் அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து பூமியில் இருந்த சாமி சிலைகளை வெளியே எடுத்து பார்த்தபோது 3 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் சிலையும், நான்கரை அடி உயரத்தில் கருட ஆழ்வார் சிலையும் இருந்தது. சிலைகளுக்கான 2 பீடங்களும் கிடைத்தது. பின்னர் அச்சிலைகளை சுத்தம் செய்த கிராம மக்கள் அவற்றிக்கு மாலை போட்டு, அர்ச்சனை செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். சேர்ந்தனூர் கிராம மக்கள் மட்டுமின்றி தென் குச்சிபாளையம், தளவானூர், திருப்பாச்சனூர், பில்லூர் கிராம மக்களும் சாமி சிலைகளை வழிப்பட்டனர். சிலைகள் கிடைத்தது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டாச்சியர் (பொறுப்பு) கருப்பசாமி, தாசில்தார் ராஜூ ஆகியோர், 2 சாமி சிலைகளையும் மீட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி தொல்பொருள் ஆய்வு துறைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் ஆய்வுக்கு பிறகு சாமி சிலைகள் இரண்டும் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது பற்றி தெரியவரும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...