மன்னார் வாகன விபத்தில் ஒருவர் பலி…!!
Read Time:53 Second
மன்னார், நானாட்டான் – வங்காலை பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.
மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து விட்டு மீண்டும் வங்காலையில் உள்ள தனது வீடு நோக்கி உந்துருளியில் பயணித்த வேளை, சிறிய பாரவூர்தி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானார்.
மன்னார் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating