உ.பி.யில் வகுப்பு தோழனை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது…!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் தன்னுடன் படிக்கும் மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள புர்காசி நகரில் இருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களும் வழக்கம்போல் நேற்று மாலை டியூஷனுக்கு சென்றனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அனந்த் தியாகி என்ற மாணவன் தனது வகுப்பு தோழனான அக்ஷய் சர்மா(17) என்பவனை திடீரென துப்பாக்கியால் சுட்டான்.
குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவனை அருகாமையில் இருந்தவர்கள் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், அனந்த் தியாகியை கைது செய்து அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களுக்குள் தகராறு ஏற்பட என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating