இணையத்தில் தற்போது அனல் கிளப்பி வரும் விவாதம் என்ன தெரியுமா…!!
நாட்டில் சோறு தண்ணி இல்லாமல் பலர் தவித்துக் கொண்டிருக்கும் போது, ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் என்று ஒரு விளையாட்டை வைரலாக்கி பலரது உயிரைக் காவு வாங்கிய இணையத்தில் தற்போது மிகத் தீவிரமாக நடந்து வரும் விவாதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் “நீங்கள்லா எங்கேந்துடா வர்றீங்க…” என்ற ரியாக்சனோடு வேதனையில் சிரிப்பீர்கள்…
நாய்க்கு எப்படி பேண்ட் போடலாம்? அதன் பின்னங்கால்களை மட்டும் மறைக்கும்படியா?, அல்லது நான்கு கால்களையும் கவர் செய்யும் படியா? என்பதுதான் அந்த விவாதத்தின் கருப்பொருள். இந்த விவாதத்தால் இரண்டாக பிரிந்துள்ள நெட்டிசன்கள், தான் சொல்வதுதான் சரி என்று நிரூபிக்கும் வகையில் தங்கள் செல்லநாய்களுக்கு டிரெஸ் போட்டு விட்டு அந்த போட்டோவை ட்விட்டர் பேஸ்புக் என்று சகலத்திலும் அப்லோட் செய்து, “பாத்தீங்களா எவ்வளவு லைக் வந்துருக்கு, இப்பவாவது நம்புங்க நா சொல்றதுதான் சரி..” என்று டெரர் பீலிங் காட்டுகிறார்கள்… இதெல்லாம் பாவம் மை சன்…..
Average Rating