சீன சுரங்க விபத்து: 5 நாட்களுக்கு பிறகு 8 பேர் உயிருடன் மீட்பு…!!
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில், பிங்யி நகரத்தில் கடந்த 25–ந் தேதி ஜிப்சம் சுரங்கம் ஒன்று சரிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இதில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 9 பேர் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதுவரை 7 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 8 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.
முன்னதாக, கடந்த 27-ம் தேதி அந்த சுரங்கத்தின் அதிபர் மா காங்போ சுரங்கத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் விபத்து காரணமாக 4 மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating