இவ்வாண்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மட்டும் 1000 பேர் பலி…!!
Read Time:1 Minute, 9 Second
2015ம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவற்றில் சாலை விதிகளை மீறியமையாலேயே பெரும்பாலான மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் சாரதிகள் சாலை விதிகளை மீறி பிற வாகனங்களில் மோதியதில் 367 பேரும், பிற வாகனங்கள் விதிகளை மீறி மோட்டார் சைக்கிளுடன் மோதியதால், 334 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் தமது கட்டுப்பாட்டை இழந்தமையால் 299 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating