வீதியில் கிடந்த 5 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி..!!

Read Time:3 Minute, 29 Second

timthumb (1)ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒங்காளியம்மன் கோவில் வீதியைசேர்ந்தவர் கோவிந்தம்மாள். மூதாட்டியான இவர்ரேசன் கடைக்கு போக கோவில் அருகே உள்ள வீதிவழியாக சென்றார்.

அப்போது கிழேஒருநகை கிடந்ததை கண்ட மூதாட்டி கோவிந்தம்மாள் அதை எடுத்து பார்த்தார். அது அவரது பார்வையில் கவரிங் நகைபோல் இருந்தது.

சரி..எதற்கும் எடுத்து பத்திரமாக வைத்திருப்போம் தொலைத்தவர்கள் வந்து கேட்டால் கொடுப்போம்… என அந்த நகையை வீட்டில் வைத்து விட்டு ரேசன் கடைக்கு சென்றார்.

இந்த நிலையில் நகையை தவறவிட்ட பெண் அங்கு வந்தார். அந்த பெண் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டுதிரும்ப சென்றபோது மடியில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை கிழே விழுந்ததாக கூறப்படுகிறது.

நகையை தொலைத்த பெண் கோவில் அருகேயும் அந்த வீதியிலும் தேடி… தேடி… ஓடி… ஓடி… பார்த்தார். நகை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி போய்விட்டார்.

இந்த நிலையில்ரேசன் கடைக்கு போய் விட்டு திரும்பிய கோவிந்தம்மாளுக்கு விஷயம் தெரிந்தது. ‘‘அய்யய்யோ… நான் கிழே கிடந்து எடுத்த நகை தங்க நகையா… தவற விட்டபெண் வந்து கேட்டாரா…? எனக்கு தெரியாமல் போய் விட்டதே…. அதை நான் தான் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறேன்’’ என்று கூறினார்.

ஒருநாள் முழுவதும் நகையை வீட்டில் வைத்திருந்த மூதாட்டி நகையை தேடி மீண்டும் அந்த பெண் வருவார்… அவரிடம் கொடுத்து விடலாம் என்று எண்ணி இருந்தார்.

ஆனால் அப்படியாரும் வராததால் கிழேகிடந்து எடுத்த நகையை மூதாட்டி கோவிந்தம்மாள் அம்மா பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.

‘‘இந்த நகை கிழே கிடந்த துங்க.. கவரிங் நகைன்னு நினைச்சேன்.. ஆனால் தங்க நகையாக இருந்து உள்ளது. தேடி ஒரு அம்மாவும் வந்தாங்களாம்.. இந்தங்க அந்த நகை…. தொலைத்தவர் வந்து கேட்டால் கொடுத்திருங்க..’’ என்று மூதாட்டி கூறினார்.

இதை கண்ட போலீசார் மெய்சிலிர்த்து அந்த மூதாட்டியை பாராட்டினர். அந்த பகுதிமக்களும் அவரை வெகுவாக பாராட்டினர்.

இந்த நிலையில் அந்த நகையை தவறவிட்ட பெண் யார்? என்று போலீசார் விசாரிக்கிறார்கள். அந்தப்பெண் பவானி பகுதியை சேர்ந்தவராக இருக்ககூடும் என்று கருதப்படுகிறது. அந்த பெண் வந்தால் நகையை அவரிடம் ஒப்படைக்கப்படும். என போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை..!!
Next post புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு தீப்பிடித்ததில் ஓலை குடிசை எரிந்தது..!!