புது வருட ஆரம்பத்திலேயே 68 பேர் வைத்தியசாலையில்…!!
Read Time:51 Second
புதிய வருட ஆரம்பத்திலேயே பல்வேறு அனர்த்தங்களுக்கு இலக்காகிய 68 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று காலை 7 மணி வரையான காலத்தில் இவர்கள் அனர்த்தங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
தீ விபத்து மற்றும் வீதி விபத்துக்களுக்கு இலக்கானவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating