வீட்டினுள் புகுந்து சிறுவர்கள் கடத்தல்: முகமூடி அணிந்த 3 நபர்களுக்கு வலை…!!
பிரித்தானியாவின் பெர்க்ஷைர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த முக மூடி மனிதர்கள் அங்கிருந்த சிறுவர்கள் இருவரை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்க்ஷைர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அத்துமீறி நுழைந்த 3 ஆசாமிகள் அங்கு தனியாக இருந்த 2 சிறுவர்களை மிரட்டியுள்ளனர்.
பின்னர் அந்த சிறுவர்களை தாங்கள் கொண்டு வந்த வெள்ளை நிற வாகனத்தில் ஏறும்படியும் வற்புறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுவர்கள் பல முறை விட்டு விட கெஞ்சிய பின்னர், கடத்தி சென்ற அந்த நபர்கள் சிறுவர்களை விடுவித்துள்ளனர்.
அச்சத்தில் துவண்டு போயிருந்த அந்த இரண்டு சிறுவர்களும், காயமேதும் இன்றி தங்களது குடியிருப்பில் வந்து சேர்ந்துள்ளனர்.
வீட்டினுள் வலுக்கட்டாயமாக நுழைந்து சிறுவர்களை மிரட்டியும், பின்னர் கடத்தி சென்ற பின்பு காயப்படுத்தாமல் விடுவித்துள்ளது குடும்பத்தினர் மத்தியில் கடும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அத்துமீறி வீட்டினுள் நுழைந்த அந்த மர்ம நபர்கள் மூன்று பேரும் முகமூடி அணிந்துள்ளதாக கூறப்படுவதால்,
விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
சில நிமிடங்களே நீடித்துள்ள இந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட சிறுவர்களுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை,
அதனால் இந்த சம்பவம் சிறுவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் அந்த குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பினை வழங்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Average Rating