க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை..!!
2015 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ள நிலையில் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் வெளியிடப்படவுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்தினையும் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதோடு தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் அனைத்தினையும் அவர்களின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த க.பொ.த. உயர்தரப்பரீட்சையானது நாடளாவிய ரீதியில் உள்ள 2180 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றது. இவற்றில் பாடசாலை பரீட்சார்த்திகள் 2,36,072 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 72,997 பேரும் உள்ளடங்கலாக மொத்தமாக 3,09,069 பேர் தோற்றியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் 31 ஆம் திகதி வெளியிடப்பபடும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பரீட்சை பெறுபேறுகளை நாளை 3 ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
Average Rating