சத்தீஸ்கரில் 3 மாணவர்களைக் கடத்திய நக்சலைட்டுகள்…!!
Read Time:1 Minute, 8 Second
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் புனேவைச் சேர்ந்த 3 மாணவர்கள் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதர்ஷ் பாட்டில், விலாஸ் வலக்கே, ஷிகிர்னா ஷெவாலே ஆகிய இந்த 3 மாணவர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி முதல் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த மகாராஷ்டிரா, ஒடிசா சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு சைக்கிளில் சென்று ‘இந்தியாவை இணைப்போம்’ என்ற அமைதி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர்.
இன்று காலை இவர்கள் மூவரும் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், கடத்தப்பட்ட 3 மாணவர்களும் விடுவிக்கப்பட்டதாக மாணவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating