இறுதிப்போரின் பாதிப்பு! ஒரு பிள்ளையின் தாய் திடீர் மரணம்..!!
முள்ளியவளையில் வசிக்கும் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் இருதய பலவீனத்தால் திடீர் மரணத்தை தழுவியுள்ளார்.
கெங்கேஸ்வரன் தீபா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, பல உயிர்களின் இறப்பை நேரில் பார்த்த காரணத்தினால் இருதயம் பலவீனமடைந்திருந்தார்.
அவரது கணவர் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாத காரணத்தினால் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். கணவனின் பிரிவும் இவரைப் பாதித்தது.
இவரின் இழப்பு முள்ளியவளை மக்களை பெரிதும் கவலையடைய வைத்துள்ளது.
குறித்த பெண்ணைப் போன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பலர் திடீர் மரணத்தை தழுவுகின்றனர். அவர்களின் இறப்பு மரண அறிவித்தல்களுடன் மட்டும் முடிவடைகின்றது.
இன்னும் பலர் இவ்விதம் போர் ஏற்படுத்திய மனக்காயங்களை ஆற்ற முடியாமால் தவிக்கின்றனர்.
பிரிவுகளை சந்தித்தவர்கள், பிள்ளைகளை தொலைத்தவர்கள், கணவனை பறிகொடுத்தவர்கள், கல்லறைகளை தேடுபவர்கள் என பல்வேறுபட்ட காரணத்தால் மக்கள் மனஅழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
Average Rating