பாக். பிரதமர் வருகை – போக்குவரத்து கட்டுப்பாடு…!!
Read Time:46 Second
இன்று மாலை 04.00 மணி முதல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு இடையிலான வீதியில், போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி மாலை 04.00 மணி முதல் 06.00 மணிவரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Average Rating