வவுனியா பகுதியில் உள்ள குளத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு..!!
Read Time:59 Second
வவுனியா பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
புளியங்குளம் பகுதியில் உள்ள விளக்குவைத்தகுளத்தில் நீரில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதை கண்ட ஊர்மக்கள் பொலிசாருக்கு தகவர் கொடுத்தையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவி (வயது 22) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. புளியங்குளம் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றுக்கு வந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating