சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து..!!
Read Time:1 Minute, 15 Second
சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று அதிகாலை ஹொரன பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளதுடன் ஐந்து மாடுகள் பலியாகியுள்ளன.
விபத்துக்குள்ளான லொறியினுள் 18 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் ஐந்து மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் லொறி விபத்துக்குள்ளானதையடுத்து லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் லொறியில் சென்ற ஏனைய இரு ஊழியர்கள் காயமடைந்த நிலையில் ஹொரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான உரிமம் எதுவும் இல்லாமல் மாடுகளை இவ்வாறு ஏற்றிச் சென்றமை தொடர்பில் சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Average Rating