நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பலி..!!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக குலுங்கின. மணிப்பூர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் மேற்கு வங்காள மாநிலத்திலும் உணரப்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் முர்ஷிதாபாத் மாவட்டம் கபஸ்தங்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதால் நவ்ஷாத் அலி (வயது 50) என்பவர் பலியானார்.
நிலநடுக்கம் ஏற்பட்டதும் தரையில் சுருண்டு விழுந்த நவ்ஷாத் அலியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தன்.
கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடுங்குளிரில் நடுங்கியபடி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்
Average Rating