92 வயதிலும் அபிநயம் பிடித்து பரதமாடும் அற்புதப்பாட்டி: வைரல் வீடியோ..!!
Read Time:1 Minute, 16 Second
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு உட்பட இந்தியா மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் பலரை தன் பரதக் கலையால் கட்டிப்போட்ட பரத நாட்டியக் கலைஞர் பானுமதி ராவ். அரங்கக் கலைஞராகவும் தன் திறமையை பறைசாற்றிய இவர், கடந்த டிசம்பர் 4-ம் தேதி 92-வது வயதில் அடியெடுத்து வைத்தார். அதற்கு அடுத்த நாளே பெங்களூரில் நடந்த பரத விழா ஒன்றில் மேடையேறி அரங்கில் இருந்தவர்களின் புருவங்களை உயர்த்த வைத்தார்.
கருணையே வடிவான யசோதை “கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்…” என்று அழைக்கும் புகழ்பெற்ற “கிருஷ்ணா நீ பேகனே பாரோ…” என்ற பாடலுக்கு அவர் அபிநயம் பிடிக்க இதை அவரது மகளான மாயா கிருஷ்ணா ராவ் வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றினார். 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து பேஸ்புக்கில் வைரலாகப் பரவி வரும் அந்த வீடியோ உங்களுக்காக….
Average Rating