95 பயணிகளுடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால் போபாலில் பரபரப்பு…!!
Read Time:1 Minute, 6 Second
போபாலில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது திடீரென டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் இருந்து இன்று ஏர் இந்தியாவின் AI-435 விமானம் போபாலுக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 95 பயணிகள் பயணம் செய்தனர். காலையில் அந்த விமானம் போபால் விமான நிலையத்தை நெருங்கியதும் தரையிறங்க ஆயத்தமானது.
அந்த விமானத்திற்கென ஒதுக்கப்பட்ட ஓடுதளத்தில் தரையிறங்கியதும் திடீரென விமானத்தின் டயர் வெடித்து சிதறியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், விமானியின் சாதுர்யத்தால் எந்த சிக்கலும் இன்றி சரியான இடத்தில் விமானம் நிலைநிறுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
Average Rating