மது அருந்திவிட்டு வீடு சென்று காதலியை தாக்கியவர் விளக்கமறியலில்..!!

Read Time:1 Minute, 46 Second

downloadதிருகோணமலையில் மது அருந்திவிட்டு காதலியைத் தாக்கி காயமேற்படுத்திய ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே இன்று வியாழக்கிழமை (7) உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை சுகதகம பகுதியைச் சேர்ந்த கே.பி.தாரக்க கசுன் வயது(26) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு புதன்கிழமை மது அருந்தி விட்டு நீண்டகாலமாக காதலித்து வந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று பெண்ணை தாக்கி காயமேற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பெண் வேறு ஒரு நபரை காதலித்து வருவதாக அறிந்த ஆத்திரத்தில் காதலன் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் புதன்கிழமை(6) இரவு கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக. விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நினைவாற்றலுக்கு சில டிப்ஸ்கள்…!!
Next post மர்ம பொருட்கள் காரணமாக ஜெர்மனி பிரதமர் அலுவலகம் மூடப்பட்டது…!!