லிபியா போலீஸ் பயிற்சி மையத்தில் குண்டு வெடிப்பு: 50 பேர் பலி…!!
மேற்கு லிபியாவில் போலீஸ் பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லிபியா செய்தி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்தரப்பு செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற போலீஸ் பயிற்சி மையத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வந்தனர். இந்த தாக்குதலை அடுத்து லிபியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. லிபியாவிற்கான ஐ.நா தூதர் மார்டின் கோப்லர் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக லிபிய மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Average Rating