எம்பிலிப்பிட்டிய மோதலில் பலியானவரின் பிரேத பரிசோதனை இன்று…!!
எம்பிலிபிட்டிய மஹா – ஹெல பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது, காவல்துறையினருக்கும், சில தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் நேற்று பலியானார்.
இது தொடர்பில் எம்பிலிப்பிட்டிய காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 21 பேர், தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்பிலிப்பிட்டிய நகரத்தின் அனைத்து கடைகளும் மூடப்பட்டு கறுப்பு கொடிகள் நேற்றைய தினம் பறக்கவிடப்பட்டிருந்தன.
நகரத்தின் பாதுகாப்பின் பொருட்டு, காவல்துறை விசேட பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த மோதலின் போது பலியானவரின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
Average Rating