சிசுவின் உயிரைக் குடித்த சார்ஜர்…!!
Read Time:58 Second
மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த அலைபேசி சார்ஜரின் வயரை வாயில் தவறுதலாக வைத்தமையால், ஏழு மாத சிசு, பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருக்கும் வயரை எடுத்த, அந்த பெண் சிசு, அதனை வாயில், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வைத்தமையால் அச்சிசுவின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில், அச்சிசு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், அச்சிசுவை காப்பற்ற முடியவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
Average Rating