சென்னையில் மாயமான இளம்பெண் கோவையில் மீட்பு…!!
Read Time:1 Minute, 21 Second
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த குமார். மகள் காயத்ரி(வயது 18). பிளஸ்–2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வடபழனி போலீசில் புகார் செய்தனர். போலீசார் காயத்ரியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் காயத்ரி நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் அருகே சுற்றித் திரிந்தார். இதைப் பார்த்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரிடம் விசாரித்த போது தாய் திட்டியதால் வீட்டில் இருந்து ஓடி வந்ததாகவும், எங்கே செல்வது? என தெரியாமல் சுற்றுவதாகவும் கூறி கண்ணீர் வடித்தார். போலீசார் அவரை மீட்டு ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
பின்னர் அவரது பெற்றோருக்கும், வடபழனி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். காயத்ரியின் பெற்றோர் மற்றும் சென்னை போலீசார் கோவை விரைந்தனர். அவர்களிடம் காயத்ரி ஒப்படைக்கப்படுவார்.
Average Rating