சிரியாவில் பள்ளி மீது ரஷியா குண்டு வீச்சு: 12 குழந்தைகள் பலி..!!
சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ளனர்.
அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரஷியா தீவிரவாதிகளுக்கு எதிராக குண்டு வீச்சு நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் அலெப்போ மாகாணத்தில் அரசு ராணுவத்துக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ரஷிய போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தின. அக்குண்டுகள் அஞ்சாரா நகரில் உள்ள பள்ளியின் மீது விழுந்து வெடித்தது. அதில் பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
அதில் பள்ளிக்குழந்கைள் 12 பேர் பலியாகினர். மேலும் ஆசிரியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 20–க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் காயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் வீச்சில் 3 குழந்தைகள் உயிரிழந்ததாக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த 2012–ம் ஆண்டில் இருந்து அலெப்போ நகரின் கிழக்கு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், மேற்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
Average Rating