இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் நில அதிர்வு…!!
Read Time:1 Minute, 15 Second
முப்பது நிமிடங்களுக்குள் இடம்பெற்ற இரண்டு நில அதிர்வுகளினால் இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் பிலிப்பையின்ஸ் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேஷியாவின் தாலத் தீவில் நேற்றிரவு 6.8 ரிக்டர் அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இந்தோனேசியாவின் தாலத் தீவில் கடலுக்கு அடியில் 102 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கிய இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அலகில் பதிவானதாக அமெரிக்க நிலத்தியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் 30 நிமிடங்களில் ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
வீடுகளைவிட்டு வெளியேறிய அவர்கள் அதிகாலை வரை வீதிகளிலேயே தஞ்சம் அடைந்திருந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Average Rating