நகைக்கடையை உடைத்து கண்காணிப்பு கெமராவை திருடிச் சென்ற நபர்…!!
Read Time:1 Minute, 15 Second
அம்பாறை, பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றின் பின்கத வை உடைத்து உள்ளே சென்ற நபரால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கெம ராவை சென்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் கடை மற்றும் அயல் பிரதேசங்களை சோதனையிட்டதுடன் இச் சம்பவம் குறித்து விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நகைக்கடையில் நகை எதுவும் அகப்படாததன் காரணமாகவே குறித்த சீ.சீ.டி. கமெராவை எடுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
Average Rating