ஆவணங்களை தேடுவதற்காக கிரிதல இராணுவ முகாமின் புலனாய்வுப் பிரிவு சீல் வைப்பு…!!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக கிரிதல இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
ஊடகவியலாளர் காணாமற்போனமை தொடர்பில் நீதிமன்றம் கோரியிருந்த ஆவணங்களை பரிசோதனை செய்வதற்காக இராணும் மற்றும் பொலிஸார் கொண்ட குழுவொன்று கிரிதல இராணுவ முகாமிற்கு சென்றுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் கோரியுள்ள ஆவணங்களை இலகுவாக தேடுவதற்காகவே இராணுவத்தளபதியின் பணிப்புரைக்கு அமைய இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதும் அதனை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கூறியுள்ளார்.
Average Rating