யாழ்ப்பாணத்தில் புறாத்திருடன் கைது…!!
Read Time:1 Minute, 2 Second
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வீடு ஒன்றின் கூட்டுக்குள் இருந்து 5 சோடி புறாக்களை திருடிய நபரை செவ்வாய்க்கிழமை (12) மாலை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
திருடியவர் குருநகர் தொடர்மாடிக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 18 வயதுடைய நபர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பகல் யாரும் இல்லாத நேரம் பார்த்து உள் நுழைந்துள்ள திருடன் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 சோடி புறாக்களை திருடி வெளியேற முற்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் அவரை கையும் மெய்யுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Average Rating