ஈராக்கில் நகரை இழந்த பின் சொந்த வீரர்களை உயிருடன் எரித்துக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

Read Time:2 Minute, 3 Second

72830526-6f33-4a96-b530-3a6755aa170d_S_secvpfஈராக்கில் நகரை இழந்த பின் சொந்த வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமாடி நகரை கடந்த ஆண்டு மே மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அங்கு அவர்கள் பொதுமக்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அதை தொடர்ந்து அந்த நகரை மீட்பதில், ஈராக் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியது. அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி புரிந்தன. எனவே, கடும் சண்டைக்குப் பிறகு சமீபத்தில் ரமாடி நகரை ஈராக் ராணுவம் மீண்டும் கைப்பற்றியது.

அது ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மிகப்பெரும் பின்னடைவாகும். எனவே தங்களது இயக்கத்தை சேர்ந்த வீரர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காட்டுமிராண்டித் தனமான தண்டனையை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வழங்கியது.

அதாவது, ரமாடி நகரில் நடந்த போரில் தோல்வி அடைந்து தப்பி வந்த வீரர்களை உயிருடன் தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அதற்காக மொசூல் நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க வீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.

அங்கு ஒரு வட்டமிட்டு அதன் நடுவில் அவர்களை நிற்க வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றதாகவும், திரண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் இது நடந்ததாக அமெரிக்காவில் வாழும் ஈராக் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரேலியாவை அதிர வைத்த “வீல் சேர்” தாத்தா.. நகர முடியாத அவர் மீது 60 செக்ஸ் புகார்கள்…!!
Next post அமெரிக்க கடற்படை படகை சிறைபிடித்தது அந்நாட்டு எம்.பி.க்களுக்கு சரியான பாடம்: ஈரான் ராணுவ தளபதி அதிரடி பேட்டி…!!