வேளச்சேரி அருகே கட்டிட மேஸ்திரியிடம் ரூ.5 லட்சம் கொள்ளை…!!
Read Time:1 Minute, 5 Second
வேளச்சேரி அருகே உள்ள துரைப்பாக்கம் குமரன்குடி 4–வது தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி. கட்டிட மேஸ்திரியாக உள்ளார்.
நேற்று இவர் வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மேடவாக்கம் வீரபந்திர நகரில் உள்ள கட்டுமான இடத்துக்கு வந்தார். ரூ.5 லட்சத்தை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து இருந்தார்.
கட்டுமான பகுதிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.5 லட்சத்தை யாரே கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating