தெல்லிப்பழை ப.நோ.கூ.சங்கங்களின் கிளைகளை இயக்குமாறு கோரிக்கை…!!
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த எட்டு மாத காலத்திற்கு முன்னர் விடுவிக்கப்பட்ட வறுத்தலைவிளான் கட்டுவன் மற்றும் தையிட்டி உட்பட ஏனைய பகுதிகளில் இயங்கிய தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பல வருடங்களாக மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்படாமையால் இந்தப் பகுதிகளில் இயங்கிய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகளின் கட்டடங்கள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் அழிக்கப்பட்டும் உள்ளன.
இத்தகைய நிலைமையில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் உரிய கட்டடங்களை திருத்தி கிளைகளை திறப்பதற்கான நிதி வசதிகளை கொண்டிராத நிலைமையே காணப்படுகின்றது. இத்தகைய நிலைமையில் மீளக்குடியேறிய மக்களின் நன்மைகருதி ஓரளவுக்கு பாதுகாப்பான இடத்தில் கிளையொன்றை ஆரம்பிப்பதற்கான நட-வடிக்கையை சங்கம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating